அவினாசி அருகே கேரள அரசு பேருந்தும் டைல்ஸ் கற்கள் ஏற்றிக் கொண்டு வந்த கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் கேரள அரசு பஸ் டிரைவர், 5 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.