தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. கலை ஆயம், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 100 பேர் கலந்து கொண்டனர்.