நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மூவர்ண கொடியை ஏற்றினார். இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.