கிழக்கு லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பும் ராணுவ வீரர்களையும் போர் தளவாடங்களையும் எல்லையில் குவித்தனர்.
பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலவையில் இருதரப்பும் ராணுவ வீரர்களை திரும்ப பெற்று வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனி விமானம் மூலம் லடாக்கில் உள்ள லே நகருக்கு சென்றார்.
அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படை தளபதி ஜெனரல் எம்.எம். நரவாணே ஆகியோர் சென்றுள்ளனர்.
அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.