வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன. ஹோலி பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசியும் நடனமாடியும் உற்சாகமாகக் கொண்டாடினர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தும், வண்ண நீரை பீய்ச்சி அடித்தும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.