சுங்கச் சாவடிகளில் நடைமுறைக்கு வந்தது ‘ஃபாஸ்டேக் ’ - புகைப்படங்கள்
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக் ’ நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்று மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அறிவித்ததுள்ளது.
‘ஃபாஸ்டேக் ’ ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் சுங்கச் சாவடியை கடக்க நேர்ந்தால், இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறையும் இன்று (பிப்ரவரி 16) தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் ஃபாஸ்டேக் ' நடைமுறை கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 'பாஸ்டேக்' கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது.
பல்வேறு காரணங்களால் அவசாகம் அளி்க்கப்பட்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
பயணிகளை வாகனங்களுக்கு (M) பிரிவிலும், சரக்கு வாகனங்களுக்கு (N) பிரிவிலும் ஃபாஸ்டேக் தரப்படும் எனத் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதை ஊக்கப்படுத்தவும், காத்திருக்கும் நேரம், எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவும், ‘ஃபாஸ்டேக் ’ முறை அமலுக்கு வந்துள்ளது.
சுங்கச் சாவடியைக் கடந்ததும் பணம் மேற்கொள்ளும் போது தானியங்கி முறையில் பணம் டெபிட் செய்யப்பட்டதும், எஸ்எம்எஸ் மூலம் குறுஞ் செய்தி வந்துவிடும்.
‘ஃபாஸ்டேக் ’ அட்டையை செக் செய்யும் ஊழியர்.
மொபைல் ரீசார்ஜ் போல, ‘ஃபாஸ்டேக் ’ அட்டையை குறைந்தபட்சம் நூறு ரூபாயிலிருந்து அதிகபட்சம் பத்தாயிரம் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
‘ஃபாஸ்டேக் ’ கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்ததுள்ள நிலையில் சுங்கச் சாவடிகள் அருகில் ‘ஃபாஸ்டேக் ’ ஸ்டிக்கர்கள் விற்பனைக்கு வந்துள்ளன.