சென்னையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் அருகில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கு எதிரில் ரூ.24 லட்சம் மதிப்பில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
செல்பி மையத்தை திறந்து வைத்த பிறகு பெண்கள், குழந்தைகள் மற்றும் நன்பர்களுடன் வந்து நின்று செல்பி புகைப்படமும் எடுத்து சென்றனர்.
மெரினாவில் வரும் மக்களை கவரும் விதமாக தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இளைய தலைமுறையினர் அதிக அளவில் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டுவதால், அவர்களை கவரும் விதமாக இந்த செல்ஃபி மையம் அமைக்கப்பட்டது.