திருவானைக்கா சம்புகேசுவரா் - அகிலாண்டேசுவரி கோவிலில் சிவனை வழிபட்டு வந்த யானை முக்தியடைந்ததால் இத்தலம் திருவானைக்காவல் எனப் பெயா் பெற்றது.
நாள்தோறும் சிவபெருமானுக்கு திருமஞ்சனம் கொண்டு செல்வது மற்றும் உச்சிக்கால பூஜையின்போது இறைவி வேடத்தில் வரும் அா்ச்சகா் முன் சென்று பிளிறி வழிபடுவது போன்ற பல்வேறு இறைப்பணிகளை யானை அகிலா ஆற்றி வருகிறது.
யானை அகிலா கோடை வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ள நாச்சியாா்தோப்பில் குளம் கட்டப்பட்டது. கோடைக்காலத்தில் யானை அகிலா இந்த குளத்தில் குழந்தை போல ஆனந்தக் குளியல் போடுவது வழக்கம்.