இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி மக்கள் தவித்ததால், கலவரம் வெடித்து ஆளும் கட்சி எம்.பி. உட்பட 3 பேர் உயிரிழப்பு.
இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவிக்கும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் ஏற்பட்டது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது வருகிறது.
போராட்டம் தீவிரமடைந்தது. பேருந்துகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்.
தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டம் தீவிரமடைந்தது. அங்குள்ள பேருந்தை ஏரிக்குள் தள்ளிய போராட்டக்காரர்கள்.
நாடு தழுவிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மக்கள்.
கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்.
அதிபா் அலுவலகத்துக்கு எதிரே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.
இலங்கையில் அரசு ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தின் போது அறுதல் தெரிவிக்கும் நபர்.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் ஆளும் கட்சி தலைவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியும், வாகனங்கள் மீது தீ வைத்தும் எரித்தனர்.
இலங்கையில் போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்து செல்லும் காவல்துறையினர்.
காவல் துறையிரை மீறி கற்கள், கட்டைகள் வீசி மோதிக்கொண்ட போராட்டக்காரர்கள்.