தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட 80 திமுக உறுப்பினர்கள் குந்தகம் விளைவித்தாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்ட நிலையில் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு வார காலத்துக்கு இடை நீக்கம் செய்தார் அவைத் தலைவர் தனபால். இதைத்தொடர்ந்து, திமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.