தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அன்று உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு கட்ட தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு அவரது உடல் நலம் தேறி விட்டதாக தெரிவித்து அப்போல்லோ மருத்துவமனை. இன்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை 4 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள், சென்னை அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்.