நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழா பாரம்பரிய முறைப்படி தில்லியில் கோலாகலமாய் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் உள்பட பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.