காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், ராம், கௌதமன், கருணாஸ், தனியரசு மற்றும் அன்சாரி ஆகியோர் சென்னை திருவல்லிக்கேனி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதை தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்திய தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.