திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு, திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.