தில்லியில் நடைபெறும் இந்தியா -ரஷ்யா 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அதிகாரிகள் அவரை தில்லி விமான நிலையத்தில் அவரை நேரில் வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் மோடியை, புடின் நேரில் சந்தித்து பேசினார்.