குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் போராட்டம் மிக கடுமையாக உள்ளது. பல இடங்களில் சாலைகளில் டயர்கள் தீவைத்து எரிக்கப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்புகள் வலுப்பெற்றதை தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலத்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.