ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். அதன்பின் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு ஈரான் பிரச்னை, 5ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க், வர்த்தக உறவுகள் மற்றும் தேசப் பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.