நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அமோக வெற்றிபெற்று 354 இடங்களைப் பிடித்துள்ளது. இதனையடுத்து தில்லி நாடாளுமன்றத்திலுள்ள மைய மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம். இக்கூட்டத்தில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.