நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணி அபார வெற்றி பெற்றது தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய எம்.பி.க்கள் பேரணியாகச் மெரீனா கடற்கரையில், உள்ள அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.