அதிமுக கட்சியை எம்ஜிஆர் தொடங்கி வைத்து 47ஆண்டுகள் நிறைவடைந்து 48ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜெயராமன், வைத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்ட தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.