இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனையடுத்து வாரணாசி, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு மகிந்த ராஜபக்சே சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.