ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் அமைதி இல்லாத சூழல் உருவாகியுள்ளது என்றார். மனித மனங்களைப் பிளவுபடுத்துவதை விட்டுவிட்டு, மாற்று வழியை யோசியுங்கள் என்றார்.