கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிடாதியில் உள்ள பண்ணை வீட்டில் கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி மகன் நிகிலின் திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில், சமூக விலகல் கடைபிடிக்கப்படாமல் திருமணம் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.