நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா கடந்த சென்ற 5-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து வழிபாட்டுக்கு பிறகு வடசென்னை பகுதியில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் முத்துசாமி பாலம் அருகே உள்ள சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்படும் என்றும் மத்திய சென்னை பகுதியில் உள்ளவர்கள் வள்ளுவர் கோட்டம் மற்றும் திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை பகுதிகளில் உள்ள சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்படும் என்றும் தென்சென்னை பகுதியில் உள்ளவர்கள் பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி வழியாக நீலாங்கரை பல்கலை நகர் கடற்கரையில் விநாயகரை கரைத்து வருகின்றனர்.