32வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்டு 9ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் தீபத்தை முறைப்படி ஜப்பானிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஏதென்ஸ் நகரில் உள்ள பழமைவாய்ந்த பான்ஏதெனிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் போல்வால்ட் சாம்பியன் கிரீஸ் வீராங்கனை கேத்ரினா ஸ்டீபானிடி மைதானத்தில் இருந்த ஜோதியை ஏற்றினார்.