புற்றுநோய் வராமல் தடுக்க இந்த சஞ்சீவினி மூலிகை கசாயத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
வில்வ இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை - ஒரு கைப்பிடி
துளசி இலை - ஒரு கைப்பிடி
மாவிலை - ஒரு கைப்பிடி
அருகம் புல் - ஒரு கைப்பிடி
அத்தி இலை - ஒரு கைப்பிடி
வெள்ளை வெற்றிலை - 15
மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை
செய்முறை
முதலில் வில்வ இலை, வேப்பிலை, துளசி இலை, மாவிலை, அருகம் புல், அத்தி இலை மற்றும் வெள்ளை வெற்றிலை அனைத்தையும் எடுத்து சுத்தப் படுத்திக் கொள்ளவும். அதனை ஒரு மண் சட்டியில் போட்டு அதில் இரண்டரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதிக்க வைத்து 500 மி.லி அளவாக சுண்ட வைத்து கசாயமாக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கசாயம் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் அருமருந்தாகும். இந்தக் கசாயத்தை வாரத்திற்கு ஒரு நாளாவது தயார் செய்து குடும்பத்தில் உள்ள அனைவரும் தலா 50 மி.லி அளவாவது வெறும் வயிற்றில் காலை வேளையில் குடித்து வந்தால் புற்று நோய் வராமல் தடுக்க முடியும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609, 75503 24609
Covaibala15@gmail.com