குள்ளக்கார் அரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
குள்ளக்கார் அரிசி - அரை கிலோ
சீரகம் - 100 கிராம்
கட்டிப் பெருங்காயம் - 2 கிராம்
இந்துப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இரும்பு வானலியில் குள்ளக்கார் அரிசியைச் சிறுதீயில் வாசனை வரும் அளவு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
சீரகத்தையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்து வைத்துள்ள குள்ளக்கார் அரிசி, சீரகம் மற்றும் பெருங்காயம் மூன்றையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கரகரப்பாக அரைத்து காற்றுப் புகாத பாத்திரத்தில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் குள்ளக்கார் குருணைக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து கஞ்சியாக வெந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சி பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால் குழந்தைகள் முதல் முதியோர் வரை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு வலிமையைத் தரும். மேலும் இந்த குள்ளக்கார் கஞ்சியை 8மாத குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இதில் சீரகம் சேர்த்திருப்பதால் எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com