மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சென்னையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.


சென்னையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்தவர் கே.ஸ்ரீராம் (33). இரு சக்கர வாகன விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அவர் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மனையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி ஸ்ரீராம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
5 பேருக்கு மறுவாழ்வு: இதையடுத்து, சேலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவருக்கு ஸ்ரீராமின் கல்லீரல் தானமாக வழங்கப்பட்டது. அவரது கண்விழிப் படலங்கள் இருவருக்கும், இதய வால்வுகள் இருவருக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com