தலையில் பேன்கள் அதிகமாக இருந்தால் முடியின் அடர்த்திக்கு ஏற்ப, வசம்பை பொடியாக்கி அத்துடன் வேப்பிலையை ஊற வைத்து அரைத்து தலைமுடியில் பூசி அரைமணி கழித்து நல்ல தண்ணீரால் தலைமுடியை அலசினால் பேன் தொல்லை இருக்காது.
**
நெஞ்சில் கபம் கட்டிக் கொண்டு அவதிபடும் அனைவருக்கும் ஓரு எளிய தீர்வாக, சிறிது கட்டி கற்பூரத்தை தேங்காய் எண்ணையுடன் கலந்து இரும்பு கரண்டியில் விட்டு அடுப்பிலோ /விளக்கிலோ காட்டி சூடு படுத்தி கொண்டு, கை பொறுக்கும் சூட்டில் விரல்களால் நெஞ்சில் தடவ, கபம் இளகும். மூச்சு சுவாசம் சீராகும்.
**
விருந்து முடிச்சாச்சு. வயிறு கனமாக இருந்தால்? இரண்டு கோப்பை தண்ணீர் எடுத்து அதனுடன் ஓரு டீஸ்பூன் சீரகமும், சோம்பும் போட்டு நன்கு கொதித்ததும்,தண்ணீர் 1 கோப்பை யாக,வற்றியதும் குடிக்கவே, வயிற்றின் பாரம் குறைந்து நன்கு பசி எடுக்கும்.
**
தண்ணீர் தாகம் அதிகமாக இருந்தால் மோரில் நீர் விட்டு, உப்பு சிட்டிகை கலந்து குடித்தால் தாகம் தணிந்து நாவறட்சி குறையும்.