உணவில் விருப்பமின்மை மற்றும் பசியின்மையை போக்கும் ஆரோக்கிய உணவுப் பொடி.
By கோவை பாலா | Published On : 24th June 2019 11:13 AM | Last Updated : 24th June 2019 11:13 AM | அ+அ அ- |

நாரத்தை இலைப் பொடி
தேவையான பொருட்கள்
காய்ந்த நாரத்தை இலைகள் - கால் கிலோ
ஓமம் - 10 கிராம்
துவரம் பருப்பு - 10 கிராம்
உளுந்தம் பருப்பு - 10 கிராம்
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை : முதலில் ஒமம், துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பை வறுத்துக் கொள்ளவும். வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் நன்கு காய்ந்த நாரத்தை இலைகளை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பொடியுடன் தேவையான அளவு பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
பயன்கள் : இந்த பொடியை ருசியின்மை, உணவில் விருப்பமின்மை மற்றும் பசியின்மை குறைபாடு உள்ளவர்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் குறைபாடு நீங்கம்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala