மாலை 5.00 மணிக்கு பிறகு திடமான உணவுகளை உண்பதை தவிர்க்கவும்.
இரவு 10.00 மணியில் இருந்து அதிகாலை 4.00 மணிவரையான நேரமே தகுந்த நித்திரைக்குரிய நேரமாகக் கருதப்படுகின்றது.
உணவை உட்கொண்டவுடன் உறங்குவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
பால், இறைச்சி, சாக்லெட், பாஸ்தா, கீரை, பச்சை மிளகாய், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை இரவில் தவிர்த்துவிடுவது நல்லது. அது உங்கள் உறக்கத்தை மட்டுமல்ல ஜீரண உறுப்புக்களையும் பதம் பார்த்துவிடும்.
இரவில் செல்லிடைப்பேசியை அணைத்துவிடுவது நல்லது. பொதுவாக செல்போனில் பேசும்போது இடது காது பக்கமாக உரையாடுவதே நல்லது.
குளிர்ந்த நீரில் எந்தவொரு மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
அதிகாலையில் அதிகமாக நீர் அருந்துங்கள். ஆனால் இரவில் குறைந்த அளவு நீரையே அருந்த வேண்டும்.