சிறிய அளவில் சர்க்கரை நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து அல்ல, ஆனால் நாம் அதை மிக மிக அதிகமாக சாப்பிடுகிறோம். உணவில் அதிகப்படியான சர்க்கரை உடல் எடை அதிகரிப்பு மட்டுமல்லாமல் இதயத்திற்கும் கெடுதல் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அதிக அளவு சர்க்கரையின் நுகர்வு (அல்லது சர்க்கரைக்கு அடிமையாதல்) மன ஆரோக்கியத்தில் கடுமையான எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என்பதற்கான ஆதாரங்கள் இப்போது உள்ளன.
தினசரி 5 சதவீதம் மட்டுமே சர்க்கரையிலிருந்து கலோரி தேவையில் உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது. ஜீரோ ஊட்டச்சத்து மதிப்புள்ள ஒரு வழக்கமான உணவில் இது 13 -15 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. பெரும்பாலும் அமெரிக்காவில், மக்கள் சர்க்கரை தேவைப்படும் அளவை விட ஐந்து மடங்கு அதிகமாக உட்கொள்கின்றனர்.
சர்க்கரையை அதிகளவில் உட்கொள்வதால் மூளை செல்களுக்கு இடையேயான தொடர்பு பலவீனமடைந்து கற்றல் சிரமங்களுக்கும் நினைவாற்றல் பலவீனத்திற்கும் வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. இது மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கு வழிவகுக்கும். சர்க்கரைக்கான ஏக்கம் ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது, எரிச்சல், மனநிலை மாற்றங்கள் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது, கிட்டத்தட்ட போதை பழக்கத்துக்கு அடிமையானது போலத்தான் சர்க்கரைக்கு அடிமையானவர்களின் நிலையும் என்கிறார்கள் நிபுணர்கள்.
அதிகப்படியான சர்க்கரை மோசமானது என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அதை அவர்களால் தவிர்க்கவே முடிவதில்லை. சர்க்கரைக்கு அடிமையாகும் பழக்கத்தை சமாளிக்க