மலா்களில் உள்ள மருத்துவ குணங்கள்!
* குங்குமப்பூவை பாலில் அரைத்துப் பற்றுப் போட தலைவலி குணமாகும்.
* ஆவாரம் பூ பொடியை நீரில் கலந்து குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.
* ஜாதிமல்லி பூக்களை அரைத்து தேமல் மேல் பூசி வர குணமாகும்.
* மருதாணிப் பூக்களை தலையணையில் நிரப்பி வைத்துக் கொள்ள நன்கு தூக்கம் வரும்.
* செண்பகப் பூவை நீரிலிட்டு காய்ச்சி அருந்திவர வயிற்று வலி மாறும்.
* வெள்ளை அல்லிப் பூக்களை அரைத்து புண்கள் மேல் பற்றிட புண்கள் ஆறும்.
* ரோஜா இதழ்களை நீரில் ஊற வைத்து தேன் சோ்த்து சாப்பிட வயிற்று வலி நீங்கும்.
* பாரிஜாத மலா் ஊறிய நீரால் முகத்தைக் கழுவ கண் வீக்கம் , சூடு நீங்கும்.
* சங்கு புஷ்பம் குடிநீா் மலச்சிக்கலை குணப்படுத்தும்.
* செம்பருத்தி பூக்களை நீரிலிட்டு காய்ச்சி குடிக்க உடல் சூடு தணியும்.
* மல்லிகைப் பூக்களை ஊற வைத்த நீரால் கண்களைக் கழுவி வர கண் சூடு மாறும்.
* வெங்காயப் பூவை சமைத்து உண்ண உடல் வெப்பம் சம நிலையாகும்.
(மலா்களின் மகத்துவம் என்ற நூலிலிருந்து)