முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து ,அதில் சம அளவு பால் சேர்த்துச் சாப்பிட்டால் விக்கல், இரைப்பு, கீழ் வாயு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகு வலி போன்றவை நீங்கும்.
முருங்கைப் பிசினை தேங்காய் எண்ணெய்யில் கரைத்து காதில் சில துளிகள் விட்டால் காதுப் புண் ஆறும்.
முருங்கைப் பட்டை, திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் உள்ள கபம் இளகி வேளியேறும்.
முருங்கைப் பட்டைச் சாறு, குப்பைமேனிச் சாறு இரண்டையும் நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சித் தடவிக்கொண்டால் கரப்பான், சொரி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
முருங்கைக் காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை பலம் பெறும்.
முருங்கைக் காயை மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து வேக வைத்துச் சாப்பிட்டால் கபம், இருமல் விலகும்.
முருங்கைப் பிசினை(50 கிராம்), சட்டியில் போட்டு தண்ணீர் (1லிட்டர்) ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா, இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com