உள் , வெளி , இரத்த மூலம் அனைத்தும் குணமாக நாவல் கொட்டை , தேற்றான் கொட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உள் மூலம் , கீழ் மூலம் , ரத்த மூலம் போன்றவை குணமாகும்.
இரத்த அழுத்தம் குணமாக நாவல் பருப்பு , சீரகம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து எலுமிச்சம் பழச் சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.
சர்க்கரை நோய்க்குத் தீர்வு நாவல் கொட்டை , சிறுகுறிஞ்சான் , வெந்தயம் , மாம்பருப்பு ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும் மூன்று கிராம் அளவுக்கு சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
நாவல் பழக் கொட்டைகளை (10) இடித்து 150 மில்லி தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி , அந்தத் தண்ணீரை தினமும் இரு வேளையும் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
அதிக இரத்தப்போக்கு கட்டுப்பட நாவல் இலைத் துளிரை (ஒரு கைப்பிடி) அளவு எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும்.
மாதவிலக்கை தள்ளிப் போட நாவல் பழத்தை மாதவிலக்கு வருவதற்கு ஒரு வாரம் முன் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு தள்ளிபோகும்.
வாய்ப் புண் , வாய் வேக்காடு குணமாக நாவல் மர இலையை(5) , தண்ணீரில் (அரை லிட்டர்) போட்டுக் கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் வாய்ப் புண் , வாய் வேக்காடு போன்றவை குணமாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com