ஆஸ்துமா நோயாளிகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கும் கஞ்சி

முதலில் சாமைஅரிசியை உடைத்து குருணையாக்கிக் கொள்ளவும்.
asthma
asthma

கறிவேப்பிலை சாமைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

சாமை அரிசி-  100 கிராம்

கறிவேப்பிலை -  ஒரு கைப்பிடி

சுக்கு     -  ஒரு துண்டு

திப்பிலி -   2

கருப்பு எள் -  ஒரு ஸ்பூன்

உளுந்து -  ஒரு ஸ்பூன்

பெருங்காயம் -  சிறிதளவு

செய்முறை

  • முதலில் சாமை அரிசியை உடைத்து குருணையாக்கிக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலையை, சுக்கு, மிளகு, திப்பிலி, உளுந்து, கருப்பு எள் ஆகியவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்து வைத்துள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து  விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சாமை குருணையை போட்டு வேக வைக்கவும்.
  • நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதை சேர்த்து நன்கு கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்.

பயன்கள்

  • இந்தக் கஞ்சியில் மருத்துவக் குணம் நிறைந்திருக்கும். 
  • ஆகையால்  இந்தக் கஞ்சியை ஆஸ்துமா நோயாளிகள் தினமும் ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் அவர்களுக்கு உண்டாகும்  வயிறு உப்புசம் மற்றும் ஜீரணக் கோளாறு , மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை தீர்க்கக் கூடிய அற்புதமானக் கஞ்சி

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com