காய்ச்சலால் உடல் நலிவடையும் பொழுது உடலுக்கு ஆற்றலை அள்ளித் தரும் அற்புதக் கஞ்சி 

முதலில் அவரை விதையை உலரவைத்து  தோல் நீக்கி பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
காய்ச்சலால் உடல் நலிவடையும் பொழுது உடலுக்கு ஆற்றலை அள்ளித் தரும் அற்புதக் கஞ்சி 

அவரைப் பருப்புக் கஞ்சி

தேவையான பொருட்கள்

அவரைப் பருப்பு - 100 கிராம்
பச்சரிசி நொய்யரிசி  - 100 கிராம்
தண்ணீர் - ஒரு லிட்டர்
உப்பு -  தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அவரை விதையை உலர வைத்து தோல் நீக்கி பருப்பை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு உலர்ந்த பருப்பை  அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  நன்கு சூடு படுத்த வேண்டும்.
  • அதில் அரைத்து வைத்துள்ள பருப்பு மற்றும் பச்சரிசி நொய்யை போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.
  • நன்கு கஞ்சியாக கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு கலந்து இறக்கி வைத்து, ஆறியதும் அதனுடன் மோர் கலந்து  கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

பயன்கள்
 
இந்தக் கஞ்சியை காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். மேலும் சுவையின்மையையும் நீக்கும் ஆற்றல் உள்ள கஞ்சி இது.

இந்தக் கஞ்சியை  காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருந்தலாம்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com