நீரிழிவு நோயாளிகள் உண்ணக் கூடிய உன்னதமானக் கஞ்சி

முதலில் கோதுமை மற்றும் புழுங்கலரிசியை முதல் நாள் இரவில் ஊற வைக்கவும்.
கோதுமை புழுங்கலரிசிக் கஞ்சி
கோதுமை புழுங்கலரிசிக் கஞ்சி

தேவையான பொருட்கள்

கோதுமை - 50  கிராம்
புழுங்கலரிசி - 50  கிராம்
பசும் பால்  - 100 மி.லி
அக்ரூட் - 20  கிராம்
சாரைப் பருப்பு - 20  கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
பனங்கற்கண்டு -  தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கோதுமை மற்றும் புழுங்கலரிசியை முதல் நாள் இரவில் ஊற வைக்கவும்.
  • காலையில் ஊற வைத்த கோதுமை மற்றும் புழுங்கலரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைத்துப் பிழிந்து பால் எடுக்கவும்.
  • அக்ரூட் மற்றும் சாரைப் பருப்பு இரண்டையும் ஒரு வாணலியில் போட்டு இரண்டு தேக்கரண்டி  நெய்யை விட்டு வறுக்கவும்.
  • வறுத்து வைத்துள்ள பருப்புகளை பிழிந்து வைத்துள்ள பாலில் சிறிதளவு விட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை  எஞ்சியுள்ள முக்கால் பங்கு பாலில்  கலந்து கொள்ளவும்.
  • அனைத்தையும் பசும்பாலுடன் சேர்த்து அதனுடன்  தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வரவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை பல வருடங்களாக நீரிழிவு குறைபாட்டால்  பாதிக்கப் பட்டவர்கள் ஒருவேளை உணவாக உண்ணுவது சிறந்த பலனைத் தரும் அற்புதமான கஞ்சி.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com