உணவே மருந்து
அதிகப்படியான சளிக் கட்டைக் நீக்கி கபத்தைக் குறைக்கும் அற்புதமான உணவு
முதலில் நரிப்பயிற்றை வறுத்து உடைத்துக் கொள்ளவும்.
நரிப்பயிறு கஞ்சி
தேவையான பொருட்கள்
நரிப் பயிறு - 150 கிராம்
பால் - 150 மி.லி
கற்கண்டு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் நரிப்பயிற்றை வறுத்து உடைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
- அதில் வறுத்து உடைத்துள்ள நரிப்பயிறை போட்டு நன்றாக கொதிக்க வைத்து காய்ச்சவும்.
- நன்கு காய்ச்சியவுடன் அதில் பால் மற்றும் கற்கண்டை நன்கு தூளாக்கி இரண்டையும் நன்கு கலக்கி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
- இந்தக் கஞ்சியை நெஞ்சில் அதிக கபம் உடையவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள சளியை அகற்றி கபத்தைக் குறைக்கும் ஆற்றல் உள்ள உன்னதமான கஞ்சி.
- படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை பல வருடங்களாக நீரிழிவு குறைபாட்டால் பாதிக்கப் பட்டவர்கள் ஒருவேளை உணவாக உண்ணுவது சிறந்த பலனைத் தரும் அற்புதமான கஞ்சி.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com