நாள்பட்ட வெள்ளைப்படுதல் குறைபாட்டைத் தீர்க்க இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள்.
தேவையான பொருள்கள்
கீழாநெல்லி - 200 கிராம்
கோவை இலை - 200 கிராம்
அசோக மரப்பட்டை - 100 கிராம்
நாவல் மரப் பட்டை. - 100 கிராம்
செய்முறை
முதலில் கீழாநெல்லி மற்றும் கோவை இலை இரண்டையும் தேவையான அளவு எடுத்துச் சுத்தப்படுத்தி நன்கு உலர வைத்து எடுத்துக் கொள்ளவும். அசோக மரப்பட்டை மற்றும் நாவல் மரப் பட்டை இரண்டையும் மேற்கூறிய அளவு எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
பின்பு உலர்ந்த கீழாநெல்லி மற்றும் கோவை இலையை தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். அசோக மரப் பட்டை மற்றும் நாவல் மரப் பட்டை தனித்தனியாக அரைத்துச் சலித்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். பொடியாக வாங்குவதாக இருந்தால் அனைத்திலும் தலா 50 கிராம் வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும்.
பயன்கள்
இந்த சூரணம் தீராத மற்றும் நாள்பட்ட வெள்ளைப்படுதல் குறைபாட்டைத் தீர்க்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய பிரச்னையினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயாரித்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டு வரவும். 48 நாட்கள் தொடர்ந்து எடுங்கள் .பின்பு தேவையறிந்து எடுத்துக் கொள்ளவும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ