சிறுகீரை திப்பிலி கசாயம்
தேவையான பொருட்கள்
சிறுகீரை - ஒரு கட்டு
சுக்கு - சிறிதளவு
திப்பிலி - 5
மிளகு - 10
மஞ்சள் தூள் - சிறிதளவு
செய்முறை
முதலில் சிறுகீரையை அலசி ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
சுக்கு, மிளகு மற்றும் திப்பிலியை தட்டி வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரையையும் மற்றும் தட்டி வைத்துள்ள சுக்கு , மிளகு , திப்பிலி ஆகியவைற்றைச் சேர்த்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூளையும் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து நீரை பாதியளவாக சுண்ட வைத்து இறக்கி வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கசாயத்தை சூட்டினால் உண்டாகக் கூடிய கப சார்ந்த குறைபாடுகளை நீக்க உதவும் அருமருந்தாக செயல்படும்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com