அதிகப்படியான பித்தம் மற்றும் இளநரையை போக்க இந்த சூரணத்தைத் தினமும் பயன்படுத்திவர நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருள்கள்
சீரகம் - 250 கிராம்
கரும்புச் சாறு - 500 மி.லி
செய்முறை
முதலில் சீரகத்தை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவும். கரும்புச் சாறு மேற்கூறிய அளவு எடுத்து அதில் சுத்தப்படுத்திய சீரகத்தைச் சேர்த்து நன்கு கலக்கி ஊறவைக்கவும்.
நன்கு ஊறினப்பிறகு நன்கு உலர வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் அதிகப்படியான பித்தம் மற்றும் இளநரையையும் குறைப்பதற்கு உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும் அதிகாலை வேளை அரை ஸ்பூன் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
-கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ