கண்பார்வை தொடர்பான குறைபாடுகளைச் சரிசெய்ய இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பலனடையுங்கள்.
தேவையான பொருட்கள்
செலரிக் கீரை - 500 கிராம்
பொன்னாங்கண்ணிக் கீரை - 500 கிராம்
செய்முறை
முதலில் செலரிக் கீரை மற்றும் மற்றும் பொன்னாங்கண்ணிக் கீரை இரண்டையும் தேவையான அளவு எடுத்து ஆய்ந்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
பின்பு அதனை நன்கு உலரவைக்கவும்.நன்கு உலர்ந்த பின்பு இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாகக் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
பயன்கள்
இந்த சூரணம் கண் பார்வைச் சார்ந்த குறைபாடுகளால் துன்பப்படுபவர்களுக்கு உதவும் அருமருந்தாகும்.
மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் இந்த சூரணத்தைத் தயார் செய்து தினமும் அதிகாலை வேளை மற்றும் மாலை என இரண்டு வேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து சாப்பாட்டிற்குப் பின்பு சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.
நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும்
பயன்படுத்தவும்.
- கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ