தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணிக் கீரைச் சாறு - 100 மி.லி
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு. - 100 மி.லி
பசும் பால். - 60 மி.லி
பசும் நெய். - 60 மி.லி
செய்முறை
முதலில் தேவையான அளவு பொன்னாங்கண்ணிக் கீரை மற்றும் கரிசலாங் கண்ணிக் கீரையை எடுத்து ஆய்ந்து பழுப்பு இலைகளை நீக்கி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும்.
சுத்தப் படுத்திய கீரைகளை அரைத்து தனித்தனியாக மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்து எடுத்துள்ள இரண்டு கீரைச் சாறுகளை ஊற்றி அதனுடன் பசும் பால் மற்றும் பசும் நெய் மேற்கூறிய அளவுச் சேர்த்து ஒன்றாகக் கலக்கி அடுப்பில் வைத்து மிதமான வெப்ப நிலையில் மெதுவாகக் காய்ச்சி அதன் மெழுகு பதமான பக்குவத்தில் இறக்கி கண்ணாடி பாட்டிலில் பத்திரப் படுத்திக் கொள்ளவும்.
தீரும் குறைபாடுகள்
கை கால்களில் உண்டாகக் கூடிய எரிச்சலைப் போக்கவும்.
அதிகப்படியான பித்தத் தன்மையினால் அடிக்கடி மயக்க உணர்வு உண்டாவதைத் தடுக்கவும்.
தீராத நாட்பட்ட வெள்ளைப்படுதல் குறைபாடுகளைத் தீர்க்கவும் உதவும்.
சாப்பிடும் முறை
இவ்வாறு மேற்கூறியமுறையில் தயாரித்த பொன்னாங்கண்ணி கீரைத் தைலத்தை மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் தலா ஒரு ஸ்பூன் அளவு வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
முதல் 48 நாட்கள் சாப்பிடவும். பின்பு தேவைக்கேற்ப தொடரவும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
- கோவை பாலா
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com