தேவையான பொருட்கள்
அரைக் கீரை. - இரண்டு கைப்பிடி
சிறு பருப்பு. - 50 கிராம்
மிளகு. - 10 கிராம்
செய்முறை
முதலில் தேவையான அளவு அரைக் கீரையை ஆய்ந்து பழுப்பு இலைகளை நீக்கி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். சிறு பருப்பை சுத்தப்படுத்திக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
ஒரு மண் சட்டியில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் சிறுபருப்பைப் போட்டு நன்கு வேகவைக்கவும். நன்கு பருப்பு வெந்தவுடன் அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரையையும் மிளகுத் தூளையும் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க வைத்தப்பின்பு அந்தச் சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
தீரும் குறைபாடுகள்
காய்ச்சலை உடனே குணப்படுத்த உதவும்.
சாப்பிடும் முறை
வடிகட்டி வைத்துள்ள சாற்றை காய்ச்சலினால் துன்பப்படும்பொழுது சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.
இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
KOVAI NATURAL & HERBAL CENTER
(Natural & Yoga Therapeutic Centre)
FOOD CONSULTANCY CENTER
கோவை பாலா,
இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell : 96557 58609 , 75503 24609
Covaibala15@gmail.com