சாதாரண மறதிக்கும் அல்ஸைமர்ஸ் மறதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? விளக்குகிறார் மனநல நிபுணர் வந்தனா!

இந்த தலைப்பை பார்க்கும் பொழுது பலரின் பதில் இல்லை என்றே தோன்றும். ஆனால் உண்மையில் மறதி ஒரு நோய்.
சாதாரண மறதிக்கும் அல்ஸைமர்ஸ் மறதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? விளக்குகிறார் மனநல நிபுணர் வந்தனா!

இந்த தலைப்பை பார்க்கும் பொழுது பலரின் பதில் இல்லை என்றே தோன்றும். ஆனால் உண்மையில் மறதி ஒரு நோய். ஞாபக மறதி என்ற நோய் பலரையும் சிரமபடுத்துகின்றது. இதிலிருந்து விடுபட முடியாமல் பலரும் தவிக்கின்றனர். 

குழந்தைகளுக்கு மறதி வந்தால் அது அவர்களது படிப்பை பாதிக்கும், அந்த சமயத்தில் பெற்றோர் தீர்வை நோக்கி செயல் படுகிறார்கள், ஆனால் முதியவர்களுக்கான மறதியை யாரும் கண்டு கொள்வது இல்லை. வயது ஆனாலே மறதி வரும் என்று எண்ணுகிறார்கள். அல்ஸைமர் நோய் (நினைவாற்றல் பாதிப்பு) முதுமையில் வரக்கூடிய நோய் என்பது பலருக்கும் தெரிவது இல்லை.

சாதாரண மறதி உள்ளவர்களுக்கு பொதுவாக பேனா, சாவி போன்ற பொருட்களை எங்கே வைத்தோம் என்று தேடுதல், தேதி நினைவுக்கு வராமல் இருப்பது, பாக்கெட்டில் கண்ணாடியை வைத்து கொண்டு வேறு இடத்தில் தேடுதல். மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டே ஃபோனை தேடுவது. சீப்பை தலையில் வைத்துக் கொண்டே அதை தேடுவது போன்ற சிரமங்கள் இருக்கும்.
அல்ஸைமர் மறதி நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக இப்படி சில அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் வரக்கூடியவை. 

இதை கவனிக்காமல் விட்டு விட்டால் அவர்களுக்கு, இந்த நோய் முற்றி போய் . தினசரி வாழ்க்கையில் நடத்தையில் தடுமாற்றம் உண்டாகும். அவர்களுக்கு அடிக்கடி குழப்பம் உண்டாகும், அன்றாட வேலைகளைச் செய்வதில் பிரச்னை, முடிவு எடுப்பதில் சிரமம், கவனிப்பதில், நேரம், தேதி, இடம் குழப்பம், சரியான வார்த்தைகள் தேர்வு செய்து பேசுவது.

செய்த வேலையை திரும்ப திரும்ப செய்வது, வீட்டில் உள்ளவர்களின் பெயர் மற்றும் அவர்கள் யார் என்று தெரியாமல் தடுமாறுவது. சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் சாப்பிடுவது, சிறு குழந்தைகள் போல நடந்து கொள்வது, வீட்டை விட்டு வெளியே சென்று விடுவது , திரும்பி வர முடியாமல் சிரமப்படுவது. 

இவை தொடரும் போது அவர்களாகவே தனக்கு ஏதோ பிரச்னை வந்துவிட்டது என்று நினைக்கின்றனர். அவை அதிகரிக்கும் போது உடல் மற்றும் மனதளவில் பாதிக்க படுகிறார்கள்.

முதியவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது ஆகையால் அல்ஸைமர்ஸ் நோயின் விகிதாச்சாரமும் அதிகரிக்க கூடும். ஆகையால், இதற்கான விழிப்புணர்வு அவசியமாகும். 

மறதி என்பது வெறும் முதியவர்களுக்கு மட்டும் வரக்கூடியவை அல்ல, சில சமயங்களில் 45 - 50 வயது உடையவர்களுக்கும் வரும். இவை 65 வயது உள்ளவர்களுக்கு 5%, 80 வயது உடையவர்களுக்கு 20% முதல் 25% வரை இப்பிரச்னை வர வாய்ப்புள்ளது. இந்தியாவில் சுமார் 41லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2006- ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 26.6 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2050 -ஆம் ஆண்டில் இது நான்கு மடங்காகக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மறதிநோய் Dementia என்பது 'சிதைவடையும் மனம்' என்ற பொருள் கொண்டதாகும். ஏழு வகையான dementia stages உள்ளது (mild to severe dementia). Alzheimer's disease மிக தீவிர stage Dementia வின் நோய் தாக்குதலாகும். (Mild cognitive impairment) வயது முதிர்ச்சியினால் சாதாரண அறிவாற்றல் சரிவா அல்லது முதுமையினால் மோசமான அறிவாற்றல் சரிவா என்பதை மருத்துவருடன் கலந்தாலோசித்து அதற்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 

மறதி காரணிகள்: இம்மறதி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை வயது, மரபியல், சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், ஊட்டச் சத்து குறைபாடு, தைராய்டு மற்றும் சர்க்கரை நோயினால் கூட வரக்கூடும்.

நீங்கள் நேசிப்பவருக்கு இந்த மறதி நோய் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி காப்பகத்தில் விட வேண்டாம். அவர்களை குடும்ப உரையாடலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

சிகிச்சை முறை : உங்கள் வயது, ஒட்டுமொத்த சுகாதாரம், மருத்துவ வரலாறு மற்றும் உங்கள் நோய் எவ்வளவு கடுமையானது இப்படி பல விஷயங்களை அலசி ஆராய்ந்த பின்னர் மருத்துவர் உங்களுக்கு சிறந்த சிகிச்சையைத் தேர்வு செய்வார்.

நினைவாற்றல் அதிகரிக்கும் உத்திகள் : எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். தினம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை ஒரு வெள்ளை போர்டில் எழுதி வைக்கலாம். முதலில் அன்றைய தேதியை எழுத வேண்டும். பிறகு அன்றைய நடவடிக்கைகளை எழுத வேண்டும். பின்னர், எந்த நடவடிக்கை முடிந்து விட்டதோ அதை அழித்து விட வேண்டும். இதனால் நீங்கள் உங்கள் சாப்பாடு, மருந்துகள், மற்றும் இதர சில நடவடிக்கையை திரும்பத்திரும்ப செய்யாமல் இருப்பதை தவிர்க்கலாம். அடுத்த நாள் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்பது தேதியை மாற்ற வேண்டும். மருந்துகளை தினசரி காலை, மதியம், இரவு என வகைப்படுத்தப்பட்ட டப்பாவில் போட்டு வைக்கலாம்.

தினசரி நாளிதழ் படிக்க பழக வேண்டும். தன் பேரக் குழந்தைகளுடன் அன்றைய செய்தி நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுடன் (Snake & Ladder) பரமபதம் விளையாடலாம். இதில், கூட்டல் கழித்தல் செய்வதன் மூலம் மூளை stimulate ஆகும். கல்லாங்காய் ஆடுவதன் மூலம் கண் மற்றும் கை மற்றும் (fine motor skills) விரல்கள் வலிமை பெறும். 

தனது குடும்ப நபர்களின் தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்து, திரும்ப திரும்ப சொல்லாம் அல்லது எழுதி பார்க்கலாம். 

வீட்டை விட்டு வெளியே போகும் போது கண்டிப்பாக பாக்கெட்டில் குடும்ப நபர்களின் ஃபோன் லிஸ்ட் வைத்துக் கொள்ள வேண்டும்.

குடும்ப விழாக்களுக்கு அழைத்துச் சென்று மற்றவர்களுடன் கலந்துரையாட செய்ய வேண்டும். திரும்ப திரும்ப சொன்னதையே சொன்னால் அவர்களை வேறு விதத்தில் திருப்ப (divert) வேண்டும். இப்படி சில உத்திகளை கையாளும் போது நாம் இந்த மறதி நோயை சுலபமாக கையாளலாம்.

அல்ஸைமர் நோய் ஒரு குடும்ப நோயாக அழைக்கப்படுகிறது, ஏனென்றால் நாம் நேசிப்பவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் வீழ்ச்சியடைவதைப் பார்க்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

அல்ஸைமர் நோய் உள்ள முதியவர்களை பராமரிப்பவர்கள் (care takers) முதலில் தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது அவசியமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com