ஸ்ரீநகர்,பிப்.11: கடையடைப்புப் போராட்டத்தினால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சனிக்கிழமை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியினர் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அக்கட்சியின் நிறுவனரான மொகமது மக்பூல் பாட்டின் 28-வது நினைவு தினத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு ஹுரியத் மாநாட்டுக் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
போராட்டத்தினால் தலைநகரில் உள்ள கடைகள், வங்கிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டன. போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
1984-ம் ஆண்டில், கொலை குற்றத்துக்காக பாட் தில்லி திகார் சிறையில் தூக்கிலடப்பட்டார்.
காஷ்மீரில் ஜேகேஎல்எஃப் அழைப்பு விடுத்திருந்த
கடையடைப்புப் போராட்டத்தின்போது வன்முறைச் சம்பவங்கள்
நிகழாதவாறு சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்.