நாட்டு மக்களின் பிரச்னையை நாம் ஒன்றிணைந்து யோசிக்க வேண்டும்: முலாயம் சிங் யாதவ்

உத்தர பிரதேசம் மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியின் வெள்ளிவிழா ஆண்டின் (25-ம் ஆண்டு) துவக்கவிழா இன்று அம்மாநில தலைநகரான லக்னோ நகரில் நடைபெற்றது.
நாட்டு மக்களின் பிரச்னையை நாம் ஒன்றிணைந்து யோசிக்க வேண்டும்: முலாயம் சிங் யாதவ்

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியின் வெள்ளிவிழா ஆண்டின் (25-ம் ஆண்டு) துவக்கவிழா இன்று அம்மாநில தலைநகரான லக்னோ நகரில் நடைபெற்றது.

இவ்விழாவில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் சரத் யாதவ், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் முலாயம் சிங் யாதவ் பேசும்போது ‘‘இன்றைய தினம் சமாஜ்வாடி கட்சி தொடங்கப்பட்ட நாள். எந்தவொரு காரணமும் இல்லாமல் நான் அனைவரையும் (ஜனதா பரிவார் தலைவர்கள்) அழைக்கவில்லை. நாம் ஒட்டுமொத்த இந்தியாவை பற்றியும், மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளைப் பற்றியும் நாம் ஒன்றிணைந்து யோசிக்க வேண்டும்’’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com