சுரங்க முறைகேடு வழக்கு: குமாரசாமியிடம் சிறப்பு புலனாய்வுப் படை விசாரணை

சட்ட விரோத சுரங்கத் தொழில் வழக்கில் முன்னாள் முதல்வரும், மஜத மாநிலத் தலைவருமான குமாரசாமியிடம் சிறப்புப் புலனாய்வுப் படையினர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
Published on
Updated on
1 min read

சட்ட விரோத சுரங்கத் தொழில் வழக்கில் முன்னாள் முதல்வரும், மஜத மாநிலத் தலைவருமான குமாரசாமியிடம் சிறப்புப் புலனாய்வுப் படையினர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
ஜந்தகல் சுரங்கத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் சிறப்புப் புலனாய்வுப் படை மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதில் முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மே 23-ஆம் தேதி வரை முன்ஜாமீன் பெற்றுள்ள குமாரசாமி, பெங்களூரு, ஹெப்பாளில் உள்ள சிறப்பு புலனாய்வுப் படை அலுவலகத்தில் விசாரணைக்காக வியாழக்கிழமை ஆஜரானார். இந்த வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் மார்ச் 29-ஆம் தேதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிறப்பு
புலனாய்வுப் படை தனது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com