பதிவுத் தபால் மூலம் தலாக் கூறியதை சட்டப்பூர்வமானதாக ஆக்கக் கோரிய நபரின் மனுவை மலப்புரம் மாவட்ட குடும்ப நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.
மலப்புரத்தைச் சேர்ந்த அலி ஃபைஸி என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு, அவரது மனைவிக்கு பதிவுத் தபால் மூலம் தலாக் கூறி கடிதம் அனுப்பினார்.
அதை சட்டப்பூர்வமானதாக்கி இருவருக்கும் விவாகரத்து அளிக்குமாறு மலப்புரம் குடும்ப நீதிமன்றத்தில் அலி ஃபைஸி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகிய அவரது மனைவி, விவகாரத்து செய்வதற்கான காரணத்தை தனக்கு தெரிவிக்கவில்லை என்று வாதிட்டார்.
'விவாகரத்து செய்வதற்கான சரியான காரணத்தையும் கூறவில்லை; இஸ்லாமிய மதச் சட்டத்தையும் முறையாகப் பின்பற்றவில்லை' என்று கூறி அலியின் மனுவை நீதிபதி ரமேஷ் பாய் நிராகரித்தார்.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி மனைவியை கணவர் விவாகரத்து செய்யும் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஆதரித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.